மனைவி: நான் அம்மாகிட்ட காட்டிட்டு இருக்கேன். அம்மா என்னன இந்த டிரஸ்ல பாத்ததில்ல. நீயும் இந்த புடவையை கட்டிட்டு, மெட்டி, வளையல் எல்லாம் போட்டுட்டு வெட்கப்படாம வந்து சேரு.
அறையைவிட்டு வெளியே வந்த மகளை பார்த்து ஆச்சரியத்தில் வாயை பிழந்தாள்.
அம்மா: என்னடி ஆம்பள மாதிரி பேண்ட் எல்லாம் போட்டிருக்க? மாப்பிள்ளை உன்ன எதுவும் சொல்ல மாட்டாரா?
மகள்: நல்லாருக்கா அம்மா?
மகள் அருகே வந்ததும் தான் அவள் கழுத்தை கவனித்து அதிர்ச்சியானாள். பயத்தில் அவள் வியர்க்க ஆரம்பித்தாள்.
அம்மா: என்னடி தாலியை கழட்டிட்டு வெறும் கழுத்தோட நிக்கற? மாப்பிள்ளை பார்த்தா என்ன ஆகறது? உடனே கழுத்துல மாட்டு.
அவள் மகள் சிரித்தாள்.
மகள்: மாப்பிள்ளை பாத்த என்ன ஆகுமா? தாலியே இப்போ அவன் கழுத்துல தான் இருக்கு.
அவள் அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அதெப்படி ஒரு ஆண் கழுத்தில் தாலி தொங்கும்?
-----------------------------------------------------
அம்மா: ஒளறாதடி. தாலிய முதலில் உன் கழுத்துல மாட்டு.
மகள்: அம்மா! நீ டென்ஷன் ஆகாத. தாலி, மெட்டி, வளையல், தோடு எல்லாமே அவன் கிட்ட தான் இருக்கு. அவன் தான் அதையெல்லாம் போட்டுக்க போறான். நீ வாங்கி கொடுத்த புடவையையும் அவன்தான் கட்டிக்க போறான்.
தன் மகள் சொல்வதை நம்புதா இல்லயா என்று குழப்பதில் இருந்தாள். மகளை வெறித்து பார்த்தாள்.
மகள்: நான் உன்கிட்ட இவ்வளவு தடவை செல்றேன்... நீ நம்பமாட்டேங்கிற... நீயே பார்த்து தெரிஞ்சுகோ.
"புடவை கட்டி முடிக்க இவ்வளவு நேரமா?
சீக்கிரம் வெளிய வாடா", என்று அவள் மகள்
தன் கணவனை அழைத்தாள். இப்போது தான் அவளுக்கு இது உண்மை என்று தோன்ற ஆரம்பித்தது. அவனால்
ஒரு ஆண்மகனை புடவையில் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. கதவு மெல்ல திறந்தது.
புடவை கட்டியபடி அவளது மாப்பிள்ளை நின்றான். காலில் மெட்டி, கையில்
வளையல் கழுத்தில் தாலியுடன், தான் வாங்கி தந்த பட்டுபுடவையை கட்டி
மாப்பிள்ளை நின்றார்.
------------------------------------------------------
சிவகாமி: மாப்பிள்ளை! நீங்களா புடவை கட்டிருக்கேங்க.
வினோத் வெட்க புன்னகையுடன் தலைகுனிந்தான்.
சிவகாமிக்கு தன் மாப்பிள்ளையை புடவையில் பார்க்க சிரிப்புதான் வந்தது. பொய் கோபத்துடன், "எல்லாம் உன் வேலைதான் டி. போய் துணிய மாத்திட்டுவாங்க." என்று அவள் மகளை பார்த்து கூறினாள்.
லதா: இல்லம்மா.. இவனுக்கு பேண்ட் போடறத விட புடவை கட்டறது தான் பிடிச்சிருக்கு. எனக்கு மாடர்னா டிரஸ் பண்ண தான் பிடிச்சிருக்கு.
சிவகாமி: புருஷன போடா வாடான்னா கூப்பிடுவ? என்ன பழக்கம் இது?
லதா தன் கணவன் அருகே போய் நின்றாள்.
லதா: அப்போ வாடி, போடி னு கூப்பிடறேன். அதுதான் கரெக்டா இருக்கும். எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு.
ஸ்டைலாக தன் மகள் ஜீன்ஸ் டீ சர்ட்
அணிந்து மாப்பிள்ளையின் தோளில் கை போட்டு நின்றாள். புடவையில் மாப்பிள்ளை
வெட்கத்துடன் நின்றான்.
தன் மகள் திருமணத்தன்று மாப்பிள்ளையின்
தாய் வரதட்சனை பணம் முழுதாக வரவில்லை என்ற தன் மகளை திருமணத்தன்றே திட்டினார்.
மாப்பிள்ளை கோட் கூட் அணிந்து கம்பீரமாக நின்றான்.
-----------------------------------
திருமணத்தன்று தன் மகள் மிகவும் அடக்கமாக தலை குனிந்து மாப்பிள்ளையின் அருகே நின்றிருந்தாள். தான் கடன் வாங்கிய பணத்தில் மாப்பிள்ளைக்கு எடுத்த கோட் கூட்டை அவன் அம்மா குறைகூறினார். இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போனது. இப்போது அவள் மகள் கம்பீரமாக ஜீன்ஸ் அணிந்து, மாப்பிள்ளையை புடவை கட்ட வைத்திருக்கிறாள். இந்த முன்னேற்றம் அவளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
லதா: உன்னத்தான் கேட்கறேன் அம்மா.... எங்க காம்பினேஷன் எப்படி இருக்கு?
சிவகாமி: ரொம்ப அருமையா இருக்கும்மா. மாப்பிள்ளைக்கு நான் வாங்கி கொடுத்த புடவை எடுப்பா இருக்கு. ரவிக்கை அளவும் சரியா இருக்கா மாப்பிள்ள?
வினோத் வெட்க சிரிப்பு சிரித்தவாரே, "சரியா இருக்கு அத்த" என்றான்.
லதா: அம்மாவுக்கு உன் கையால நான் வாங்கின இந்த புது துணியை குடுத்திரு...
வினோத் தன் கையால் ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டை மாமியாருக்கு கொடுத்தான்.
சிவகாமி: ஐய்யோ.. என்ன இதெல்லாம். எனக்கு இந்த மாதிரி துணியெல்லாம் போட்டு பழக்கம் இல்ல. அதுவும் மாப்பிள்ள முன்னாடி எப்படி இதை எல்லாம் போட்டுட்டு வரது ?
லதா: மாப்பிள்ளை மாமியார் முன்னால புடவை கட்டிட்டு வரும்போது மாமியார் ஏன் மாப்பிள்ளை முன்னாடி ஜீன்ஸ போட வெட்கப்படனும்? நீங்க தைரியமா போடுங்கம்மா.
அவள் கணவரை பார்த்து..,"ஏண்டி, கேட்டுட்டே நிக்கற... நீயும் செல்லலாமல்ல?"
வினோத்: ஆமாம் அத்த... உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமா இருக்கும். போட்டு பாருங்க...
சிவகாமி ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள். சிவகாமி, சராசரி இந்திய தாயை போல சற்று சதை போட்டிருந்தாள். சுமார் 45 வயது இருக்கும். தன் மகளை போலவே தனக்கும் ஜீன்ஸ் அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக