சிவகாமி புடவையை கழற்றிவிட்டு ஜீன்ஸ்க்குள் கால்களை நுழைத்தாள். வெட்கத்துடன் இடுப்பை ஆட்டி ஜீன்ஸை மேலே ஏற்றினாள். அவள் பெரிய தொடைகளை ஜீன்ஸ் அழகாக அணைத்தபடி இருந்தது. ஜிப்பை மேலே இழுத்துவிட்டு பட்டனை மாட்டிக்கொண்டாள். பிறகு டீசர்ட்டை அணிந்துகொண்டாள். கண்ணாடியில் பார்ததவுடன் அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. பார்க்க அவள் வயது குறைந்த பெண்ணை போல இருந்தாள். டீசர்ட்டை கீழே இழுத்தாலும் ஜிப் பகுதி அப்பட்டமாக தெரிந்தது. அவசரபட்டு இந்த டிரஸை போட்டுட்டோமோ? இப்படியே எப்படி மாப்பிள்ளை முன்னாடி போறது என்று யோசித்தாள். அவன் ஆம்பளையா இருந்துட்டு புடவை கட்டிட்டு விரும்போது நான் பேண்ட் போடறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என்று நினைத்துக் கொண்டாள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.
லதா அவள் அம்மாவை கண்டதும் புன்னகைத்தாள்.
லதா: அம்மா! இந்த டிரஸ்ல நீங்க சூப்பரா இருக்கேங்க!
லதா தன் அம்மாவை அணைத்தாள். இன்னும் வெட்கத்துடனே இருந்த அவள் கணவனை பார்த்து, "அம்மாவுக்கு இந்த பேண்ட் டீசர்ட் நல்லா இருக்கு இல்லடி?"
புடவையில் இருந்த வினோத், ஜீன்ஸ் அணிந்திருந்த அவன் மாமியாரை பார்த்தான். கொழுத்த, நல்ல வளைவுகள் உள்ள சிவகாமியின் தேகத்திற்கு ஜீன்ஸ் நன்கு பொருத்தமாக
இருந்தது. அவன் மனைவி லதா ஏற குறைய அவன் உயரம் இருப்பாள். அவள் அம்மா
சிவகாமி சற்று அவனை விடவே உயரம் தான். டைட்டான ஜீன்ஸ் டீசர்ட்டில் இன்னும் உயரமாக
தெரிந்தாள்.
--------------------------------------------------------------------------------
வினோத்: ஆமாம் அத்த! உங்களுக்கு இந்த டிரஸ் நல்லாருக்கு அத்தை. ரொம்ப இளமையா தெரியறேங்க.
பார்பவர்களின் உணர்வை தூண்டும் வகையில் பெரிய மார்பகங்கள் டீ-சர்ட்டில் அப்பட்டமாக தெரிந்தாலும் வினோதிற்கு ஏனோ மாமியாரை இவ்வாறு பார்க்கும் போது சற்று பயமாகவே இருந்தது. பள்ளியில் படிக்கும் போது ஒரு ஆசிரியையிடம் அடிக்கடி பிரம்பில் அடி வாங்குவான். அந்த ஆசிரியை பார்த்தாலே வினோத் உட்பட பல மாணவர்களுக்கு பயத்தில் ஒன்னுக்கு வந்துவிடும். இப்போது ஏனோ மாமியாரை பார்த்தும் அதே பயம் வந்தது.
சிவகாமிக்கு ஆரம்பத்தில் டைட்டான உடைகளை அணிந்து தன் மாப்பிள்ளை முன்பு வருவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால் மாப்பிள்ளை ஒரு பெண்ணை போல புடவை கட்டியிருந்ததால் ஒரு ஆண் முன்பு ஜீன்ஸ் அணிந்து நிற்கிறோம் என்ற உணர்வே சிவகாமிக்கு இல்லாமல் போனது.
லதா அவள் அம்மாவை அணைப்பதை நிறுத்திவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தாள். சிவகாமி, தன் மகளை பின்தொடர்ந்தாள். லதா அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள். சிவகாமிக்கு தன் மகள் திருமணதிற்கு பிறகு நன்கு சுதந்திரமாக வாழ்வதை அறிந்து பூரித்து போய் ஆனந்த கண்ணீர் சிந்தினாள். மகளுக்கு குங்கும சிமிளில் இருந்து குங்குமத்தை தந்தாள்.
"நீயும் வந்து ஆசிர்வாதம் வாங்கி கோ டி" என்ற தன் கணவனை பார்த்து கூறினாள்.
பயமும் வெட்கமும் ஒருசேர வினோத் புடவையை சரி செய்தவாறு பூஜை அறைக்குள் நுழைந்தான். அவன் மாமியார் முன்பு மண்டியிட்டு அவள் கால்களில் விழுந்தான். அவன் கழுத்தில் கட்டியிருந்த தாலி ரவிக்கைகுள் இருந்து வெளிய தொங்கியது. வளையல்கள் ஜல் ஜல் என சத்தம் செய்ய, மாமியாரின் கால்களை தொட்டான்.
"எழுத்திரு மா", என்ற கூறியவாரே சிவகாமி தன் மருமகனை தூக்கிவிட்டாள். தன்னை அறியாமலேயே "போங்க... வாங்கா...." என்று மரியாதை குடுத்து பேசாமல். "வா மா. போ.மா" என்று பேசிவிட்டதை உணர்ந்தாள்.
சிவகாமி: மன்னிச்சிறுங்க தம்பி. தெரியாம அப்படி கூப்பிட்டுட்டேன்.
வினோத்: பரவாயில்லை அத்த. உங்களுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடுங்க.
சிவகாமி: ரொம்ப நன்றி மா. உன்ன பார்த்த
எனக்கு லதா போல இன்னொறு மகள் இருக்கற மாதிரிதான் தோணுது. என் பெண்ணுகிட்ட பேசற
மாதிரி உரிமையா பேசிட்டேன்.
--------------------------------------------------------------------------------------
குங்குமத்தை அவனிடம் நீட்டினாள். அவன் மார்பில் தொங்கும் தாலியை பார்த்தாள்.
சிவகாமி: தாலிக்கும் குங்குமம் வைம்மா... உன் கையால அப்படியே விளக்கேத்தி வெச்சிடு.
மாமியார் சொல்வதை அப்படியே செய்தான். மனைவி முன்பு மட்டும் புடவை கட்டி வந்த அவனுக்கு மாமியார் முன்பு புடவை கட்ட எப்படி தான் தைரியம் வந்தது என்று தெரியவில்லை. அவன் புடவை கட்டி கொண்டு ஜீன்ஸ் அணிந்திருந்த மாமியாரின் காலில் விழுந்து ஆசிர்வதம் வாங்குவதை லதா விளையாட்டாக வீடியோ எடுத்திருந்தாள். மேலும், ஆட்டோ டைமர் மோடில் மூன்று பேரும் நன்று போட்டா எடுத்து கொண்டனர். மனைவியும், மாமியாரும் ஜீன்ஸ் அணிந்து கெத்தாக நிற்க, ஆண்மகனாக இருந்தும் இவன் புடவை அணிந்து பவ்வியமாக இருந்தான்.
சிவகாமி துடப்பத்தை எடுத்து வீடு கூட்ட ஆரம்பித்தாள்.
லதா: என்னம்மா பண்றேங்க?
சிவகாமி: ஏன்? பாத்தா தெரியலையா?
லதா: இவள வீட்டல வெச்சுட்டு நீங்க ஏன் சிரமபடறேங்க? அந்த துடப்பத்தை அவ கைல கொடுங்க முதல்ல.
சிவகாமியிடமிருந்து துடப்பத்தை அவள் மருமகன் பெற்றுகொண்டான். சிரித்த முகத்துடன் சிவகாமியும் துடப்பத்தை மாப்பிள்ளையின் கையில் கொடுத்தாள்.
அவன் வீட்டை கூட்டும் விதத்தை பார்த்து,"ஐய்யோ...உனக்கு ஒழுங்கா வீடு கூட்ட தெரியாதா? வாக்வம் கிளீனர் யூஸ் செஞ்சே பழகி நீ எப்படி துடப்பத்துல வீடு கூட்டறதுனே மறந்துட்ட.", என்று அவன் மனைவி கூறினாள்.
லதா.. நல்லா குனிஞ்சு கூட்டு.
மாப்பிள்ளை வீடு கூட்டும் அழகை
பார்த்து சிவகாமிக்கு சிரிப்பு தான் வந்தது. லதாவோ அவனை கோபமாக முறைத்து
கொண்டிருந்தாள்.
------------------------------------------------------------------------------
சிவகாமி: உன் புருஷனே பாவம்... புடவை கட்டிட்டு கஷ்டப்பட்டு கூட்டும் போது நீ ஊக்கப்படுத்தாம கடுகடுனு பேசறயே?
லதா: கல்யாணம் ஆன புதுசுல இவனோட அம்மா, நான் மேஜைக்கு அடியில கொஞ்சம் குப்பையை தெரியாம கூட்டாம விட்டதுக்கே என் கன்னத்துல பலர்னு விட்டுட்ட. இந்த பொம்பள குப்பை எதுவும் இல்லைனாலும் வீட்ட ரெண்டு தடவை கூட்ட சொல்லும். இவன நான் அப்படிய வேலை வாங்கறேன்?
லதா ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். அறையில் ரெண்டே நாற்காலிகள்தான் இருந்தன.
லதா: நீ ஏன்ம்மா நிக்கற? அந்த சேர்ல உட்காரு.
சிவகாமி சிறிது தயக்கத்துடன் சேர்ரில் அமர்ந்தாள்.
லதா: இவனோட அம்மா பண்ணறதுல பத்து பர்சன்ட் நீ செஞ்சா கதறி அழுதுடுவான்.
வினோதிற்கும் தெரியும் அவன் அம்மா
செய்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை அன்று ஆனால் அவனால் அவன் அம்மாவை எதிர்த்து
பேச முடியவில்லை.
வினோத்: சரிங்க அத்த...
லதா: கூட்டினது போதும். ஒரு பக்கெட்டில தண்ணி எடுத்துட்டு வந்து சுத்தமா துடைச்சு விடு.
வினோத்: மாஃப் எங்க இருக்குங்க அத்த?
சிவகாமி: எங்க வீட்டில மாஃப் யூஸ் பண்ணறது இல்லம்மா.. குனிஞ்சு நிமித்து வேல செஞ்சாதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும்னு அதையெல்லாம் யூஸ் பண்ணறதில்லை.
லதா: இவன் அம்மா விட்டில இருந்த இத்து போன மாஃப் ஒடஞ்சதுக்கு நான் தான் காரணம்னு சொல்லி புது மாஃபே வாங்கி தறல. இந்தியா விட்டு போற வரை தினமும் வீட்டை துணியால தான் தொடச்சேன்.
வினோதிற்கு இப்போதே கண்ணை கட்டியது.
இருக்கமான ரவிக்கைக்குள் அவன் உடம்பு நன்கு வேர்த்திருந்தது. அவன் புடவைக்குள்
சிரமபட்டு கொண்டிருக்க, அம்மாவும் மகளும் டிவியில் பேட்டி
கொடுப்பவர்கள் போல சேரில் எதிரெதிரே சற்று சேர்ரை திருப்பியவாறு அமர்ந்து ஏதோ
மும்மறமாக பேசிக்கொண்டிருந்தனர்.
-----------------------------------------------------------------------------
வீட்டின் மற்ற அறைகளை துடைத்துவிட்டு ஹாலுக்கு வந்தான்.
பேச்சு சுவாரஸ்யத்தில் லதா கால்மேல் கால் போட்டு அமர்ந்தது போலவே சிவகாமியும் தன் மாப்பிள்ளை அறையில்தான் இருக்கிறார் என்ற உணர்வை இழந்து கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள்.
அலுவலகத்தில் பல பேர்களை மெய்பவன்
இன்று புடவை கட்டிக்கொண்டு, பள்ளி படிப்பை கூட முடிக்காத அவன்
கிராமத்து மாமியாருக்கு பணிந்து வீட்டு வேலையை செய்கிறான். அவள் ஜீன்ஸ் அணிந்து
கால் மேல் கால்போட்டு அமர்ந்திருக்கும் தோரணை மிகவும் கம்பீரமாக இருந்தது. ஏதே ஒரு
கம்பெனி சி.இ.ஓ. போல கெத்தாக இருந்தார். அறையை துடைத்து முடிக்கும்வரை அவர்களை
வெளியே நிற்க சொல்லலாம் என்று எண்ணினான். ஆனால் அவன் மாமியாரையும் மனைவியையும்
பார்த்ததும் அவர்களை எழுப்புவதற்கு அவனுக்கு துணிவு வரவில்லை. மண்டியிட்டு அறையை
துடைக்க ஆரம்பித்தான்.
வினோதிற்கு முழுவதும் வேர்த்தது.
கழுத்தில் இருந்த தாலி கொடி ரவிக்கையை விட்டு வெளியே வந்து தொங்கியபடி இருந்தது. தன்
ஈரக்கையால் அதை எடுத்து ரவிக்கைக்குள் போடமுடியாமல் அப்படியே தரையை ஈர துணியால்
துடைத்தான். அவர்கள் இருக்கும் இடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற இடங்களில்
துடைத்தான். துடைத்துக் கொண்டே அருகில் வரும் போது அவன் கைகளில் அணித்திருந்த
வளையல் ஒலி கேட்டு லதாவின் கவனம் அவன் மேல் சென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக