அன்று தான் அவன் முதல் தடவையாக என்
காலில் எல்லோர் முன்பும் வெட்க பட்டு கொண்டே விழுந்தான்(ள்). எனக்கு காப்பி கொண்டு
வந்து கொடுத்து நின்று கொண்டு இருந்தான், நான் சோபாவில் உட்கார்ந்து கொண்டு இருக்கும்
போது. அப்புறம் என் காலை தொட்டு கும்பிட்டு விட்டு, அப்படியே என் காலடியிலேயே உட்காந்து கொண்டான்
ஒரு வித பய பக்தியுடன். அதை பார்த்த நான் இதற்கு மேலும் தாமதிக்க கூடாது என்று எண்ணி, உடனே சம்மதம்
என்று கூறி விட்டேன். அப்ப அவன் முகத்துல வந்த சந்தோசத்தை பார்க்கணுமே. அவன் அம்மா கூட
புரிந்து கொண்டு சிரித்தார்கள்.
அடுத்த நாள் நான் அலுவலகம் வந்த உடன், அவன் எனக்கு
கதவை திறந்து விட்டு, நான் உள்ளே வந்தவுடன்,
அன்று முழுவதும் அவனை எனக்கு ஒரு வேலைக்காரனா
சேவகம் செய்ய வைத்தேன். அன்று நான் ஆணை இட்டதும், டக்கென என் காலில் விழுந்து விட்டான், இந்த முறை அலுவலக உடையில் ஒரு கம்பீரமான, வாட்ட சாட்டமான, கட்டான ஆம்பிளை ஆக.
எஜமான் ஒருவன் தனது வேலைக்காரிக்கு, தானே ஒரு
வேலைக்காரனாக மாறி வேலை செய்தது எனக்கு ரொம்ப கர்வமாக இருந்தது. இதே இடத்தில அவன்
என்னை ஒரு வேலைக்காரியாக எப்படி எல்லாம் அதட்டி வேலை வாங்கி இருக்கான். இப்ப என்
திறமையான நடவடிக்கைகளால் (சூழ்ச்சிகளால் என்று வேண்டுமானாலும் சொல்லி
கொள்ளுங்கள் - கவலை இல்லை), அதே இடத்தில, கம்பீரமா, ராஜாவா, ஆண் சிங்கமா, தன்னோட குகைல இருந்து ஆட்சி செய்த ஒரு ஆண் மகனை, அவனோட இடத்துலயே, இப்படி அவன்
குகைக்குள்ளேயே நுழைந்து, அவனை வீழ்த்தி, இப்படி காலுல விழ வைச்சதை நினைக்கும் போது, எனக்கே என்
பேருல ரொம்ப பெருமையா இருக்குது. இதெல்லாம் ஒரு ஆரம்பம் தாண்டி, இன்னும் ரொம்பவே
இருக்குடி உனக்கு என்று அவனிடம் சொன்னேன்.
எனது அப்பா மற்றும் அவனோட அப்பா, எனது சின்ன
வயதில் நடந்து கிட்ட விதம்தான், எனக்கு இப்படி எல்லாம் சின்ன வயதில் இருந்தே ஆம்பிளைங்க மேல ஒரு வித
வெறுப்பு உணர்வை மனதில் விதைத்து வைத்தது. அது மட்டு மில்லாமல், ஆரம்பத்தில்
அவனும் தனக்கே உரிய ஆம்பிளை திமிரும் பணக்காரன் என்ற ஆணவமும் கொண்டு என்னையும் என்
அம்மாவையும் நடத்தின விதமும் என் வெறுப்புக்கு தூபம் போட்டு வளரும்படி செய்து
விட்டது.
அதுவும் ராத்திரி நான் என்று தெரியாமல்
என்னிடமே அப்படி என்னை பற்றியே அப்படி பேசி விட்டு, பகலில் வந்து என்னை என்ன வெல்லாம் அதிகாரம்
பண்ணுவான் முன்பு. அதெல்லாம் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. வைச்சு செய்யணும்டா உன்ன
என்று எண்ணி கொள்கிறேன். என்னவோ அன்று அவன் அம்மாவிடம் ரொம்ப நல்லவன் போல பேசின
இல்ல, இப்ப
நான் உன்னை அடிமையா வேலை வாங்கும் போது, அப்படி உண்மையாக நடந்து கொண்டு, என் கோபத்தை
மெல்ல மெல்ல குறை பார்ப்போம் என்று நினைத்து கொள்கிறேன்.
அப்போது நான் சற்றே சிரித்தவாறு கேலியா
சொன்னேன், என்னடி, நேத்து பொம்பிளையா
புடவைய கட்டி கிட்டு காலுல விழுந்த,
இன்னிக்கு இப்படி ஆம்பிளையா காலுல விழுற.
விட்டா அடுத்து கல்யாணம் முடிந்த பிறகு முதல் இரவுல, நீ என் காலுல அம்மணமா விழுவ போல இருக்கே
என்றேன். அதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்றான் அவன் வெட்கத்துடன்
தலையை குனிந்து கொண்டே. அதற்கு காத்து கொண்டு இருக்கேன் நான் என்றேன், அவனை
குறும்பாய் பார்த்து, கண் சிமிட்டி சிரித்தவாறே. அன்று முதல் அவனை எப்போதும் டி போட்டு தான்
கூப்பிடுவேன், நாங்கள் தனியாக இருக்கும்போது.
பிறகு எங்கள் கல்யாணம் வழக்கம் போல
நடந்தது. எங்கள் அலுவலக பெண்கள் எல்லாம், பாருடி இந்த வசந்தாவை , பிடிச்சாலும் பிடிச்சா, நல்லா புளியம்
கொம்பா பிடிச்சா என்று தங்களுக்குள் பேசி கொண்டார்கள். நான் இப்ப அவங்களுக்கு
அதிகார பூர்வமாக சின்ன எஜமானி ஆகி விட்டேன்.
முதல் இரவு அன்று அவன், எங்களுக்கு
மட்டும் தெரியும் படி ஒரு புது கல்யாண பெண்ணாக அலங்கரித்து கொண்டு, எனக்கு பால்
எடுத்து கொண்டு வந்தான்(ள்).
தலையில் பூவைத்து கொண்டு, கையில் வளையல், காலில் கொலுசு, உதட்டுக்கு
லிப்ஸ்டிக், கண்ணுக்கு மை, காதில் தோடு என புது கல்யாண பெண்ணாக அவன்(ள்) வந்து நின்ற போது என்
கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவனது அம்மா அவனுக்கு வாக்ஸிங் எல்லாம் கத்து
கொடுத்து, உடம்பில்
உள்ள எல்லா முடியையும் எடுத்து விட்டு இருந்தார்கள். மீசை இல்லாம கல்யாணத்துல அவனை
பார்த்தவங்க கூட வடக்கதி
ஹீரோ போல அழகா இருக்கான் என்று சொன்ன போது அவன்
அம்மா கேலியா சிரிச்சதுக்கு இப்ப அர்த்தம் புரிந்தது. அன்னிக்கு இரவு என்
அம்மாவும், என் மாமியாரும் அவனை(ளை) அப்படி புது கல்யாண பெண்ணாக பட்டு புடவையில்
அலங்கரித்து உள்ளே அனுப்பி வைத்த போது அவனுக்கு இருந்த வெட்கத்தை பார்க்க கண்
கொள்ளா காட்சியாக இருந்தது. உடனே என் மொபைலில் புகைப்படம் எடுத்து கொண்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக