வார
இறுதி நாள் இரவு பார்ட்டி P01
அன்று மாலை சுமார் 8 மணி அளவில் நான்
நன்கு அழகான ஒரு புடவை அணிந்து கொண்டு வர, பிரபாகர் சார் கோட் சூட் அணிந்து இருவரும்
நான்சி மேடம் வீட்டுக்கு (சொல்ல போனால் சிறிய தனி மாளிகை) வந்து சேர்ந்தோம்.
ஜேம்ஸ் தான் கதவை திறந்தது. வழக்கம்
போல கோட் சூய்ட் அணிந்து அவனின் உயரத்துக்கு ஏற்ப கம்பீரமாய் நின்று எங்களை உள்ளே
வாருங்கள் என்று சிரித்தவாறு அழைத்து சென்றான். ஆனால் அவன் சிரிப்பில் ஏதோ ஒரு
குறும்பு தென்பட்டதாக உணர்ந்தேன். உள்ளே நான்சி மற்றும் ரோஸி ஆளுக்கொரு தனி தனி
சோபாவில் உட்கார்ந்து எங்களை எதிரில் இருக்கும் ஒற்றை சோபாவில் அமர சொன்னார்கள்.
அது ரொம்ப பெரியது - தாரளமாக ரெண்டு பேர் உட்காரலாம். எனவே நாங்கள் இருவரும்
அமர்ந்தோம்.
ரோஸி, விக்டர் என்று அழைக்க, விக்டர்
உள்ளேயிருந்து ஒரு ட்ரே இல் மது கோப்பைகளுடன் வந்தான். நான் மது குடிப்பதில்லை
என்று சொன்னவுடன், என்னை சற்றே ஆச்சரியமாக பார்த்து கொண்டே நிற்க, ரோஸி சற்று அதட்டலான
குரலில், என்ன
நின்று கொண்டு இருக்கிறாய், போய் ஜூஸ் கொண்டு வா என்றாள்.
கூடவே பிரபாகர் சாரை பார்த்து, நீங்க எப்படி
என்று கேட்க, நான் கொஞ்சமாக மது அருந்துவேன் என்று அவர் சொல்ல, நான் அவரை சற்று
முறைத்து பார்த்தேன்.
அவர் என்னிடம் மெதுவான குரலில், எப்போதாவது தான்
அருந்துவேன், இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, கொஞ்சமாக எடுத்து கொள்கிறேன் என்று கெஞ்சும்
குரலில் ஏதோ தன் மனைவிடம் அனுமதி வாங்குவது போல கேட்க, நான் இதில் என்ன
சார் இருக்கிறது, பார்ட்டி க்கு வந்து உள்ளோம், என்ஜோய் பண்ணுங்க ஆனால் அளவோடு என்று சொல்லி
ஒரு புன்முறுவல் செய்தேன். அவர் சந்தோசம் ஆகி விட்டார்.
அப்போது விக்டர் எனக்கு ஜூஸ் கொண்டு வர, நான் அதை அருந்த, பிரபாகர் சார்
தனது முதல் பெக் மது அடித்து விட்டார். வெகு நாளைக்கு அப்புறம் மது அருந்துவதால், அதுவும் உயர் தர
வெளி நாட்டு சரக்கு என்பதால், ஆசை அதிகமாகி, ரெண்டாவது ரவுண்டு சென்று விட்டார். நான் அவரின் கையை பிடித்து
அழுத்தி கண்ட்ரோல் செய்ய வேண்டியதாகி விட்டது. அச்சமயம் அவர் அத்துடன் நிறுத்தி
கொண்டாலும், அதற்குள் அவருக்கு சற்றே போதை ஏறி விட்டது என்று எனக்கு புரிந்தது.
அப்போது நான்சி மேடம் என்ன பார்ட்டி
ஸ்டார்ட் செய்யலாமா என்று கேட்க,
அதற்கு பிரபாகர் சார் அதுதான் ஏற்கனவே ஸ்டார்ட்
ஆகி விட்டதே என்று சொல்லி சிரிக்கிறார். நான்சி மேடம் க்கு புரிந்து விட்டது, பிரபாகர் சார் ஏற்கனவே
போதையில் மிதக்க ஆரம்பித்து விட்டார் என்று.
அவர்கள் சத்தமாய் சிரித்தவாறே இன்னும்
ஏகப்பட்டது உள்ளது அனுபவிக்க என்று சொல்லி, ஜேம்ஸ் மற்றும் விக்டர் பக்கம் பார்வையை
திருப்பி, போங்கடா, போய் வழக்கமாக
இந்த பார்ட்டி ஆரம்பத்தில் நீங்கள் அணியும் உடைகளை அணிந்து வாருங்கள் என்று சொல்ல, அவர்கள்
இருவரும் அப்படியே மேடம் என்றவாறு கூழை கும்பிடு போட்டவாறு உள்ளே செல்கின்றனர்
என்னை சற்று உற்று பார்த்தவாறே.
சிறிது நேரம் கழித்து அவர்கள் சென்ற உள்ளே
இருந்த அறையில் இருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். அவர்களை பார்த்ததும், இந்த
பார்ட்டிக்கு நாங்கள் மட்டும்தான் என்று நினைத்து இருக்கும் போது இன்னும் பல புதிய
நபர்கள் ஏற்கனவே வந்து இருக்கிறார்கள் போலயே, அதனால் இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என்று
தெரிந்து கொள்ளும் நோக்கத்தில், மற்றும் எனக்கு அவர்களை யார் என்று தெரியாததால், நான்சி மேடம்
அவர்களிடம், அவர்களை அறிமுக படுத்தி கொள்ளும் நோக்கத்தில், இவர்கள் யார்
என்று கேட்க, அவர்கள் சத்தமாய் சிரிக்கிறார்கள். ஹாய் நித்யா நன்றாக பார், எல்லாம் உனக்கு
நன்கு தெரிந்தவர்கள் தான் என்று சொல்லி இன்னமும் பலமாக சிரிக்கிறார்கள்.
அதில் ஒரு பெண், என்னை பார்த்து
சிரித்தவாறே, ஹாய் நித்யா மேடம் என்று சொன்னதை கேட்டவுடன், அந்த குரல் ஒரு
ஆணின் குரலாக அதுவும் எங்கோ கேட்ட குரலாக எனக்கு தோணியது.
வெளிச்சத்தில் சற்று உற்று பார்த்தால்
அது வேறு யாருமில்லை, ஜேம்ஸ் சார் தான் பெண் உடை அணிந்து என் முன்னால் நிற்பது என்று
அறிந்து வியப்பாக பார்த்தேன்.
ஜேம்ஸ் பிங்க் நிறத்தில் குட்டை பாவாடை
அணிந்து, மேலே
வெறும் ப்ரா ஒன்றை அணிந்து ஒரு முழு பெண்ணாக நின்று கொண்டு இருந்தான்(ள்). அதேபோல
அந்த இன்னொரு பெண் வேறு யாருமில்லை,
விக்டர் தான். அவனும் அதே போல கவர்ச்சிகரமான பெண்
உடையில்.
அப்போது அங்கே பெண் உடையில் வந்த
ஜேம்ஸ் மற்றும் விக்டர் அங்கிருந்த அனைவருக்கும் இன்னும் ஒரு ஒரு கோப்பை மது
(எனக்கு ஜூஸ்) கொண்டு வந்து கொடுத்து விட்டு, நான்சி மற்றும் ரோஸி காலடியில் ஆளுக்கு ஒரு
புறமாய் மண்டி இட்டு நின்றனர். நான்சி மற்றும் ரோஸி இருவரும் கம்பீரமாக கோட்
அணிந்து கீழே சிறிய ஸ்கிர்ட் அணிந்து அங்கே இருக்கும் சோபாவில் கால் மேல கால்
போட்டு அமர்ந்து இருந்தார்கள்.
பிரபாகர் சார் என்ன நடக்கிறது என்று
புரியாமல் குழம்பி போய் மூன்றாவது ரவுண்டு மதுவை அருந்தி
கொண்டே பாதி போதையில் என்னை பார்க்கிறார்.
குழப்பத்துடன் இருக்கும் என்னை
பார்த்து நான்சி மேடம், இதுதான் பார்ட்டி யின் முதல் ரவுண்டு என்று சொல்லி சிரிக்கிறார்கள்.
ஏற்கனவே அலுவலகத்தில் நான்சி மற்றும்
ரோஸி இருவரும் ஜேம்ஸ் மற்றும் விக்டர் ஆகிய இருவரையும் கம்பீரமான ஆண் உடையில் இருக்கும்போதே அடிமை போல நடத்துவதை பார்த்து
கொண்டு தான் இருக்கிறேன். இப்போது இன்னும் கொடுமையாக அவர்களை பொம்பிளை உடை உடுத்த
வைத்து,
எங்கள் முன்னிலையில் காலடியில் மண்டி இட வைத்து கேவல படுத்துகிறார்கள். இவர்களும்
முற்றிலும் வெட்கம் இல்லாமல் இதை எதோ தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி
விழுந்து கிடக்கிறார்கள்.
நான் மெல்ல திரும்பி பக்கத்தில்
அமர்ந்து இருக்கும் பிரபாகர் சாரை
பார்க்கிறேன். அவரோ பாதி மயக்கத்தில் கவர்ச்சியாய் உடை அணிந்து புதிதாக
வந்த அந்த இரண்டு பெண்களையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக