தனது சிறு வயதில், பெண்களால் அவமானப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் விடுத்த
வேண்டுகோளுக்கு இணங்கி, என் முகநூல் நண்பர் ஒருவர் என்னுடன்
நடத்திய உரையாடலை அவரது சம்மத்துடன் இங்கே பிரசரித்து உள்ளேன் - ஒரு தனி பதிவாக -
சில பகுதிகளாக வெளி வரும்.
நீங்களும் உங்கள் அனுபவங்களை இவ்வாறு
பகிர்ந்து கொண்டால் அதையும் உங்கள் அனுமதியுடன் இவ்வாறே பிரசுரிக்க ஆவலாய் உள்ளேன்.
பொட்டை
க்ராஸி (கீர்த்தி) யின் முதல் அனுபவம், P01:
Curtesy: Pottai Crossy (கீர்த்தி), Facebook
கீர்த்தி: வணக்கம். என்னோட சின்ன வயசுல இருந்து இப்போ
வரை நான் பொண்ணுங்க கிட்ட அவமானப்பட்டு அடங்கி போனதை உங்களோட Share பண்றதுல பெருமை
படுறேன்.
பொட்டச்சி புருஷன் (சுதா): நல்லது, முதலில் எப்போது / என்ன / எப்படி நடந்தது என்று சொல்ல
முடியுமா?
கீர்த்தி: என்னோட முதல் அவமானம்
நடந்தது என்னோட 9, 10
வயசுல
நான் பள்ளிக்கூடம் 5வது
படிக்கும்போது நடந்தது
சுதா: ஐந்தாவது
படிக்கும் போது - ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும் அறியா பருவத்தில் அவமான படுவது. சொல்ல ஆரம்பியுங்கள்.
கீர்த்தி: அது தொடக்கப்பள்ளி. 5வது வரை இருக்கும். 4வது
படிக்குற வரை படிப்பிலும், விளையாட்டிலும், மற்ற கலைகளிலும் பள்ளியில் நானே முதல் மாணவன். அதனால் அப்போவே தலை கணமும் + ஆண் திமிரும் அதிகமா இருந்துச்சு. பொண்ணுங்கள மதிக்காம கிண்டல்
பண்றது வம்பிழுக்குறதுன்னு இருப்பேன்.
சுதா: சின்ன
வயசு பசங்களுக்கே இருக்கும் திமிர்தான் அது. அப்புறம் என்ன நடந்தது
கீர்த்தி: எனது பள்ளியை பொறுத்தவரை முதல் மார்க்
வாங்குபவர்கள் தான் Class
Leader. அது ஆணோ பெண்ணோ. அந்த பதவிக்காகவே எப்போவும் படிச்சு முதல் மதிப்பெண்
வாங்குவேன். ஏன்னா கிளாஸ் லீடர் ஆகிட்டா அப்புறம் டீச்சர்க்கு அப்புறம் நான் தான்
அந்த கிளாஸ்ல.
கீர்த்தி: இப்போது 5ம் வகுப்பு,
பள்ளியிலேயே நாம தான் பெரிய பசங்க. மொத்த பள்ளிக் கூடத்தையும்
ஆட்டி வைக்கலாம்னு கனவு கண்டுட்டு இருந்தேன். ஆனா அது கனவாவே போதும்னு அப்போ
எனக்கு தெரியல.
சுதா: சரி
சரி, கிளாஸ்
லீடர் ஐயே ஒரு கூட படிக்குற பொண்ணு உன்னோட கனவை கலைச்சிட்டுளளா - எப்படி ஆச்சு அது?
கீர்த்தி: பள்ளிக்கூடம் திறந்து ஒரு வாரம் நல்லா
போய்ட்டு இருந்துச்சு.. அட்மிஷனும் முடிஞ்சுருச்சு. அப்போ
தான் என் கிளாஸ்க்கு புதுசா வந்து Join பண்ணா அந்த பொண்ணு, பேரு ராஜி.
சுதா: So, ஒரு புது பொண்ணு அந்த பள்ளி கூடத்தில் பல வருடங்களாக பிடிக்கும்
பையன அவமான படுத்த போறா - சூப்பர் - என்ன நடந்தது அப்புறம்?
கீர்த்தி: புதுசா வந்த பொண்ணுங்கறதால நான் அவள பத்தி
பெருசா நினைக்கல. சரி நமக்கு ஒரு புது அடிமை சிக்கிருக்குனு தான் நினைச்சேன்.
அதுக்கு ஏத்த மாறி அவளும் அமைதியான பொண்ணா தான் இருந்தா. ஆனா அந்த
அமைதிக்கு பின்னாடி இருந்த புயல் அப்போ எனக்கு தெரியல..
சுதா: ஆட்டம் போடுற பொண்ணுங்களை கூட நம்பலாம், ஆனா அமைதியா இருந்து ஊமை
குசும்பு பன்னுவது பொண்ணுங்களுக்கு கை வந்த கலை.
கீர்த்தி: வழக்கம்போல
முதல் மாதம் தேர்வு முடிந்து மதிப்பெண்கள் குடுத்தாங்க. வழக்கம்போல நாம் தான்
முதல் மார்க்குனு இருக்கும்போது என் தலையில இடியே விழுந்த மாறி இருந்துச்சு அத
பார்க்கவும். நான் 2ஆவது மார்க்குனு போட்ருந்துச்சு.
சுதா: முதல் மாசமே உன்னை கவுத்துட்டாளா.
கீர்த்தி: என்னடா இது
நம்மள மிஞ்ச இங்க யாரு இருக்கானு யோசிக்குறதுக்குள்ள எல்லாரும்
ராஜிக்கு கை தட்டுங்க. அவ தான் கிளாஸ்ல முதல் மார்க்னு சொல்லவும் அப்படி ஒரு பலத்த
கரகோஷம்.
கீர்த்தி: அதுவும்
அவளுக்கும் எனக்கும் வெறும் ஒரே ஒரு மார்க் தான் வித்தியாசம்..
சுதா: ஆமா இத்தனை நாளா கிளாஸ் லீடர் னு ஆட்டம் போட்டு கிட்டு
இருந்தவனை லோக்கல் பசங்க ஜெயிக்க
முடியாதப்பா,
புதுசா வந்த ஒருத்தி
ஜெயிச்சுட்டானா அவளுக்கு சப்போர்ட் கொஞ்சம் கூடவே தானே இருக்கும்.
கீர்த்தி: இதுல அந்த
டீச்சர் வேற பரவாயில்லையே நம்ம கிளாஸ்க்கு புதுசா ஒரு லீடர் கிடைச்சுருக்கானு
சொல்ல இப்போ இன்னும் 2
மடங்கா கை தட்டுற சத்தம் என் காத கிழிக்குற
அளவுக்கு கேட்டுச்சு..
சுதா: அப்ப இனிமே அந்த புது பொட்ட பிள்ளை சொல்றதை கேட்டு
நடக்கணும். இல்லைன்னா அவ ஸ்கூல் டீச்சர் கிட்ட போட்டு கொடுத்து அடி வாங்க
வைச்சுடுவா.
கீர்த்தி: என்னால இதை
ஏத்துக்கவே முடியல கோபமும் ஆத்திரமும் வந்துச்சு.. சரி என்ன
இருந்தாலும் புதுசா வந்தவ கிட்ட நம்ம கெத்து விடற கூடாது அவளே லீடர் பதவி வேணாம்னு
சொல்ல வைக்க நினைச்சேன்.
சுதா: நீ நினைச்சா மட்டும் போதுமா. என்னமோ செய்ய நினைச்சு, நீ பல்பு வாங்கி இருக்கன்னு மட்டும் நல்லா புரியுது. என்ன நடந்தது?
கீர்த்தி: இப்படி
இருக்கும்போது மறுநாள் ஸ்கூல் பிரேயர் முடிஞ்சு டீச்சர்ஸ் மீட்டிங் நடந்துச்சு.
அப்போ கிளாஸை ராஜி தான் அமைதியா பாத்துக்கணும். இது தான் சான்ஸ்னு நான் என்
நண்பர்களோடு சேர்ந்து கத்தி பேசிட்டு சத்தம் போட்டு இருந்தேன்.
கீர்த்தி: அவ என்ன அமைதியா
இருன்னு சொல்லாததால எனக்கு பயந்துட்டானு நினைச்சு முன் பெஞ்சுல இருந்து பின்னாடி
திரும்பி பேசிட்டு இருந்தேன்
சுதா: போர்டு ல உன் பெயரை, உன் நண்பர்கள் பெயரோடு சேர்த்து எழுதி பல கோடு போட்டு விட்டாளா?
கீர்த்தி: அப்போ திடீர்னு
என் நடு மண்டையில நறுக்குன்னு கொட்டு விழ வலி தாங்காம தலைய தடவிட்டே எந்திச்சு
நின்னேன். டீச்சரா இருக்குமோனு நினைச்சா அது ராஜி
கீர்த்தி: கொட்டுனது
மட்டும் இல்லாம அமைதியா இருக்க மாட்டியானு ஒரு சவுண்ட் விட்டா. அவ்ளோதான்
மொத்த கிளாசும் அமைதியா ஆகிட்டு.
சுதா: புது பொண்ணுக்கு ரொம்பவும் தான் தைரியம் ஜாஸ்தி.
தலையிலேயே எல்லோரும் பார்க்க வைச்சு குட்டிட்டாளா. என்ன ஒரு மிரட்டல். எதிர்பாராத நிகழ்வுல ஒண்ணுமே தோனாம கொஞ்ச நேரம்
அப்படியே அடங்க வேண்டியதுதான்.
கீர்த்தி: இதுக்கு இடையில
டீச்சர் கிளாஸ்கு வர நான் டீச்சர் இல் என்னை அடிச்சுட்டானு போட்டு குடுத்தேன். (எப்படியும்
டீச்சர் அவளை கேள்வி கேப்பாங்கனு) ஆனா ராஜி நான் பேசுனது பத்தி சொல்லவும் அந்த
டீச்சரும் ஆமா உன் சத்தம் தான் கீழ வரை கேட்டுச்சே. Very Good
Raji. எனக்கு என் கிளாஸ் Discipline
ஆ இருக்கணும் அது உன் கையில் தான் இருக்குனு
பாராட்ட ஆரம்பிச்சுட்டாங்க. (தேர்தல்ல ஆட்சி மாறவும் ஆளுங்கட்சிக்கு போலீஸ்காரங்க சப்போர்ட் பண்ற
மாறி டீச்சரும் ஒரு நிமிஷத்துல மாறிட்டாங்க)
கீர்த்தி: அது
மட்டுமில்லாம இனி ராஜி தான் லீடர். பழைய நினைப்புல யாரும் இருக்க கூடாது. ராஜி சொல்றத
கேட்டு தான் எல்லாரும் நடக்கும்னு என்ன பாத்து வேற சொன்னாங்க. தலைல
குட்டும் வாங்கி அதை தடவிட்டே எதும் பேச முடியாம உக்காந்தேன்.
சுதா: இவன் கொட்டத்தை அடக்க ஒரு சரியான ஸ்டுடென்ட்
கிடைக்கணுமே னு காத்து கிட்டு இருந்தப்ப, அது ஒரு பொண்ணு வடிவத்துல கிடைக்க இன்னும் குஷி ஆக இருந்து
இருக்கும் அந்த டீச்சர் க்கு.
சுதா: வழக்கமா சின்ன கிளாஸ்க்கு பொம்பிளை டீச்சர் தான்
இருப்பாங்க. பசங்க கொட்டத்தை அடக்க ஒரு தைரியமான பொண்ணு கிடைச்சா நிச்சயம் அவங்க
அந்த பெண்ணுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க.
கீர்த்தி: ஆமா ஆமா, டீச்சர் அப்படி
சொன்னதுல இருந்து கிளாஸ் மட்டும் இல்ல நானும் கொஞ்சம் கொஞ்சமா ராஜி கண்ட்ரோலுக்கு
வர ஆரம்பிச்சேன்.
சுதா: ராஜியோட ஆட்டம் அப்புறம் எப்படி இருந்தது?
--- ராஜியோட ஆட்டம் தொடரும் ----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக